Saturday 19 November 2011

கவர்ச்சியான கண்களைக் கொண்ட சவூதி பெண்கள் பர்தா அணிய வேண்டும்? _



                வூதி அரேபியாவில் உள்ள பெண்கள் கண்கள் தெரியும் வகையில் பர்தா அணிகின்றனர். இனி அந்தக் கண்களும் தெரியாத அளவுக்கு பர்தா அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கக்கூடும் என்று தெரிகிறது.

சவூதி அரேபியாவில் பெண்கள் பர்தா அணியாமல் வெளியே செல்ல முடியாது. ஆனால் அவர்கள் கண்கள் தெரியும் வகையில் பர்தா அணிவது உண்டு.

காந்தக் கண்களால் மற்றவர்கள் கவனத்தைப் பெண்கள் கவர்வதாகக் கூறி, அதைத் தடுக்கும் வகையில் இனிக் கண்கள் வெளியே தெரியாத வகையில் பர்தா அணியுமாறு உத்தரவு பிறப்பிக்கவிருக்கிறது அந்நாட்டின் நன்னெறி காப்பு மற்றும் தீய எண்ணங்கள் தடுப்புக் குழு. 

பிக்யா மஸ்ர் என்று இணையதளம் கூறியதாக பாக்ஸ் நியூஸ் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது, 

பெண்கள் பொதுமக்களின் கவனத்தைக் கவரும் வகையில் கண்கள் தெரியும்படி பர்தா அணியக்கூடாது என்று உத்தரவிடும் உரிமை இந்த குழுவுக்கு உள்ளது என்று நன்னெறிகளைக் காப்போம், தீய எண்ணங்களை தடுப்போம் குழுவின் செய்தித் தொடர்பாளர் ஷேக் மோத்லப் அல் நபெத் தெரிவித்துள்ளார். 

சவூதியில் பெண்கள் பொது இடங்களுக்கு பர்தா இல்லாமல் வரக்கூடாது. அப்படி வந்தால் அபராதம், கசையடி போன்ற தண்டனைகள் விதிக்கப்படும். 

நன்னெறிகளை காப்போம், தீய எண்ணங்களைத் தடுப்போம் குழு கடந்த 1940ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. சவூதியில் இஸ்லாமியச் சட்டங்கள் மீறப்படாமல் இருக்கிறதா என்று அந்தக் குழு கண்காணித்து வருகிறது. 
___

Thanks- bikyamasr

Friday 26 August 2011

தீய சக்தியின் நோக்கம் என்ன

இணையம்,ஊடகத்தின் கருத்தின் படி எல்லா
சம்பவத்திற்குப் பின்னால் எதோ ஒரு தீய சக்தி இருப்பதாகவும்,குழப்பம்,இனவாதம்,அரசியல்
போன்ற தேவையற்ற பிளவுகளை உண்டாக்குவதற்கு முற்படுகின்றார்கள் எனவும் தெரிய வருகின்றது

யதார்த்தத்தில் கிண்ணியாவில் நடந்தது எதிர் பார்க்கப்படாத தீய சக்திகளால் திட்டமிடப்பட்டு
நடத்திய சம்பவம் என்பது தெளிவு எனினும் ஊடகம்,இணையம் சில தேவையற்ற கருத்துக்களை
வெளியிடுகின்றன.உதாரணமாக: முஸ்லிம்கள் தீவரவாதிகள்,அவர்களுக்கும் கல்முனை ,காத்தான்குடி
இனருக்கும் தொடர்பு இருப்பதாகவும் வெறுமனே வதந்தியை கிளப்புகின்றனர் ஆக,நமது ஊடக
தரப்பினருக்கே இவை அனைத்தும் செல்லும் .மொத்தத்தில் இந்த கிளர்ச்சியலர்களின் நோக்கம் என்ன ?

*நாட்டில் மீண்டும் இனப்பிரச்சினை,பிளவை உண்டக்குதலா...
*நாட்டில் எல்லா பகுதிகளிலும் படையினரை செயலில் அமர்த்துவதா...
*அரசியலின் விளையாட்டில் இது ஒரு தந்திரமா ....
*அல்லது ஊர்/உலகுக்கு காட்டவேண்டும் என்ற நோக்கமா.....
*அமைதியாக இருக்கின்ற முஸ்லிம் ஊர்களை தூங்க விடாதிருப்பதா...
*அல்லது புனித இஸ்லாமிய ரமலான் மாதத்தை இழிவுபடுத்துவதா...?

விடை கிடைக்க விடிய விடிய காத்திருந்தாலும் யதார்த்தம்,உண்மை வெளிப்படதோ...! இனவாதம்,பிரச்சினை இல்லாமல் அமைதியாக சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ
வேண்டும் என்று பிரார்த்திப்போம் ..

Friday 15 July 2011

சமகால ஜமாத்துக்களும் அதன் பரவலும்

சமகால ஜமாத்துக்களும் அதன் பரவலும்

by ICT on Friday, 15 July 2011 at 16:07



இன்று பரவலாக பல ஜமாத்துக்களும்,சமூக நலன்புரி இயக்கங்களும் கொள்கைகளும் வளர்ந்திருப்பதும் நாம் அறிந்த விடயமே. என்றாலும் இலங்கையை பொருத்த மட்டில் ஜமாத்தே இஸ்லாமி, இஹ்வனுள் முஸ்லிமீன், தவ்ஹீத்,தப்லீக் போன்ற சமூக பற்றுள்ள ஜமாத்துக்கள் குறிப்பிடத்தக்கதாகும்.



'மனிதர்களுக்கிடையில் ஏற்றத் தாழ்வில்லை. யாரும் யாருக்கும் உயர்ந்தவரும் இல்லை. தாழ்ந்தவரும் இல்லை. மேலும் படைக்கப் பட்ட உயிரினங்கள் பலவற்றை விடவும் மேன்மைப் படுத்தப் பட்டவர்கள் மனிதர்களே' எனவும் திருமறையும் நபி(ஸல்) அவர்களின் வாக்குகளும் தெளிவு படுத்துகின்றன.



நிச்சயமாக உங்கள் “உம்மத்து” - சமுதாயம் - (வேற்றுமை ஏதுமில்லா) ஒரே சமுதாயம் தான்; மேலும் நானே உங்கள் இறைவன். ஆகையால், என்னையே நீங்கள் வணங்குங்கள் (21:92)



எனினும் ஒரு சிலர் தன் கொள்கையை வளர்ப்பதட்காகவும்,ஆள் சேர்பதட்ககவும் செயல்படுவதை காணலாம். இருந்தாலும் இவ்வமைப்புக்கள் இஸ்லாத்திட்காக அளப் பெரிய பங்களிப்பும்,சேவையும் செய்வதை யாராலும்மறைக்க முடியாது. பாரிய சேவைகள் செய்து வரும் இவர்கள் ஒன்றாக சேர்ந்து செயட்படும்போது நாம் ஒன்று சேர்ந்து அன்னியர்கள்,அயலவர்கள் தீட்டும் திட்டத்திற்கு எதிராக செயல்பட மாத்திரமல்லாமல் ஒரு எடுத்துக் காட்டாகவும் இருக்கலாம்.அன்றியும், ஓர் உண்மையான நேரான சமூகத்தை கட்டியெழுப்பி உடைந்த இஸ்லாமிய சாம்ராஜ்யத்தை புனர் நிர்மாணம் செய்ய முடியும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.



(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும்,(தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும்கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள்,தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப்புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை நேர்வழியில் செலுத்துகிறான்.(Quraan)



சகோதரர்களே ! வாருங்கள்.... " நாம் ஏன் வெவ்வேறு படகில் பயணம் செய்ய வேண்டும் ஒரே கப்பலில் ஒன்றாக பயணம் செய்வோமே'' வெள்ளையன் கருப்பன் ,எஜமான் அடிமை,குளம் ,கோத்திரம் என்று வேறுபாடு காட்டாத முழு மனித சமூகத்திற்குரிய ஓர் ஒப்பற்ற பாதை இஸ்லாமே ! இதுவன்றி ஏன் நமக்குள் வேறுபாடு,வேற்றுமை என்று பிளவு பட வேண்டும். "கறுப்பரை விட வெள்ளையரோ, வெள்ளையரை விட கறுப்பரோ சிறந்தவரல்லர்; அரபியரை விட அரபியல்லாதவரோ, அரபியல்லாதவரை விட அரபியரோ சிறந்தவரல்லர். இறையச்சம் உடையவரே உங்களில் சிறந்தவர்". - நபிகள் நாயகம் (ஸல்)



அகீதா ,மத்காப் ,கொள்கை வெறியை தூக்கி எறிவோம் இஸ்லாத்திற்கு எதிரான சதிகளையும்,கிருமிகளையும் அழித்து ஒழிப்போம்; ஒன்று சேர்வோம் வாருங்கள்.





ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், 'மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள்.இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள்.



ஒற்றுமை,சகோதரத்துவம்,நியாயம் வாழ்க ..! வளர்க ....! இஸ்லாம். கருத்தக்களையும்,சிந்தனைகளையும் வரவேற்கிறோம்.

Sunday 19 June 2011

ஹதீஸ் கலையும் பலஹீனமான ஹதீஸும்



ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.ஹதீஸ் என்ற அரபி சொல்லுக்கு செய்தி' என்று பொருள். முஹம்மது நபியவர்கள் செய்த பிரச்சாரம், அவர்களின் வாழ்க்கை முறை, இவைகளை பார்த்த மற்றும் அறிந்த நபியவர்களின் தோழர்கள் முஹம்மது நபியைப் பற்றி சொன்ன செய்திகள் மற்றும் விளக்கங்களை ஹதீஸ் என்ற பொருளில் முஸ்லிம்கள் பயன்படுத்துவது வழக்கம்.


எந்த வகையான ஹதீஸ்களை ஏற்கலாம்? எவற்றை ஏற்கக் கூடாது என்ற அடிப்படையில் ஹதீஸ்களை நான்கு முக்கிய தலைப்புகளில் அடக்கலாம். இதற்கு மேல் உப தலைப்புகளும் உண்டு.
  1. ஸஹீஹ் (ஆதாரப்பூர்வமானவை)
  2. மவ்ளூவு (இட்டுக்கட்டப்பட்டது)
  3. மத்ரூக் (விடப்படுவதற்கு ஏற்றது)
  4. ளயீப் (பலவீனமானது)
எந்த ஹதீஸாக இருந்தாலும் இந்த நான்கு வகைக்குள் அடங்கிவிடும். ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதை மட்டுமே முஸ்லிம்கள் நடைமுறைப்படுத்த வேண்டும். மற்ற மூன்று வகைகளில் அமைந்த ஹதீஸ்களை நடைமுறைப் படுத்தக்கூடாது என்பது பெரும்பான்மையான இஸ்லாமிய அறிஞர்களின் முடிவு.

லயீப் ஹதீஸ் பற்றி இங்கு சற்று ஆராய்வோம் 


1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.
2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.
3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.
4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.
5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.
6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.
7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.
8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.
9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.
10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.
11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.
12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.
13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.
இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. 

Monday 13 June 2011

எமது கோட்பாடும் அதன் வளர்ச்சியும்



by Zuhair Ali on Wednesday, 08 June 2011 at 11:07

இஸ்லாம் கட்டுக்கதைகள்,புராணக்கதைகள் இல்லாத ஒரு எளிதான அல்குர்ரன் ,ஹதீத் அதன் அறிவுரைகள் சார்ந்த ஓர் ஒப்பற்ற நெறியாகும் தொன்று தொட்டு ஒரே குறிக்கோளான இஸ்லாமும் அதன் கோட்பாடும் ஒன்றாகவே இருந்தது அதற்கான ஒரு எடுத்துகட்டக இந்த வசனத்தை நபி இப்ராகிம் (அலை) அவர்கள் பிரார்த்தித்த போதனை என்றும் நமக்குள் ஊறி இருக்க வேண்டுமே அல்லாமல் எனது கோத்திரம்,குளம் ,கோட்பாடு என்றல்லாம் வாதம், பிரதி வாதம் என்பனவற்றை எரிந்து விட்டு முஸ்லிம் என்ற நாமத்தை மொழிவோம்.


رَبَّنَا وَاجْعَلْنَا مُسْلِمَيْنِ لَكَ وَمِن ذُرِّيَّتِنَا أُمَّةً مُّسْلِمَةً لَّكَ وَأَرِنَا مَنَاسِكَنَا وَتُبْ عَلَيْنَا إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

"எங்கள் இறைவனே! எங்கள் இருவரையும் உன்னை முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களாக்குவாயாக, எங்கள் சந்ததியினரிடமிருந்தும் உன்னை முற்றிலும் வழிபடும் ஒரு கூட்டத்தினரை (முஸ்லிம் சமுதாயத்தை)ஆக்கி வைப்பாயாக, நாங்கள் உன்னை வழிபடும் வழிகளையும் அறிவித்தருள்வாயாக, எங்களை(க் கருணையுடன் நோக்கி எங்கள் பிழைகளை) மன்னிப்பாயாக, நிச்சயமாக நீயே மிக்க மன்னிப்போனும், அளவிலா அன்புடையோனாகவும் இருக்கின்றாய்."

இந்த வசனம் முற்றிலும் உன்னை வழிபாடும்  முஸ்லிம்களாக்குவாயாக,என்பதை தெளிவாக அல்லாஹ கூறும்போது  நாம் ஏன் நமக்குள் குளம்,கோத்திரம் ,கட்சி என்றெல்லாம்  வாதிட வேண்டும் மாறாக நாம் ஒரே முஸ்லிமான  கூட்டத்தினர் அதிலும் நபி இப்ராகிம் (அலை) அவர்கள் நமக்கென உரித்தான நாமத்தை அன்றே பெயர் சூட்டிவிட்டார்கள் ஆக,வாருங்கள் நாம் ஒன்றாக தலைமைத்துவம்,இஸ்லாமிய ஆட்சி என்ற கோட்டையை பிடிக்க பயணம் செய்வோம் 


பொறாமை,போட்டி,வஞ்சகம் இதற்கெல்லாம் அப்பால்பட்ட இந்த புனித முஸ்லிம் என்ற கோட்பாடை ஒரே கட்டிடத்தின் கீழ் கொண்டு செல்வோம் இன்னும் நமக்குள் சிறிய கருத்து வேறுபாடுகள் இருக்கலாம் எனினும் அவற்றை சுலோபமாக,இலகுவாக தீர்த்துக் கொள்ளலாமே ...! அல்லாஹ இவ்வாறு  



 كَانَ ٱلنَّاسُ أُمَّةً وَٰحِدَةً فَبَعَثَ ٱللَّهُ ٱلنَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمُ ٱلْكِتَٰبَ بِٱلْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ ٱلنَّاسِ فِيمَا ٱخْتَلَفُواْ فِيهِ وَمَا ٱخْتَلَفَ فِيهِ إِلاَّ ٱلَّذِينَ أُوتُوهُ مِن بَعْدِ مَا جَآءَتْهُمُ ٱلْبَيِّنَٰتُ بَغْياً بَيْنَهُمْ فَهَدَى ٱللَّهُ ٱلَّذِينَ آمَنُواْ لِمَا 
ٱخْتَلَفُواْ فِيهِ مِنَ ٱلْحَقِّ بِإِذْنِهِ وَٱللَّهُ يَهْدِي مَن يَشَآءُ إِلَىٰ صِرَٰطٍ مُّسْتَقِي

(ஆரம்பத்தில்) மனிதர்கள் ஒரே கூட்டத்தினராகவே இருந்தனர்;. அல்லாஹ் (நல்லோருக்கு) நன்மாராயங் கூறுவோராகவும், (தீயோருக்கு) அச்சமூட்டி எச்சரிக்கை செய்வோராகவும் நபிமார்களை அனுப்பி வைத்தான்;. அத்துடன் மனிதர்களிடையே ஏற்படும்
கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பதற்காக அவர்களுடன் உண்மையுடைய வேதத்தையும் இறக்கி வைத்தான்;. எனினும் அவ்வேதம் கொடுக்கப் பெற்றவர்கள்,
தெளிவான ஆதாரங்கள் வந்த பின்னரும், தம்மிடையே உண்டான பொறாமை காரணமாக மாறுபட்டார்கள். ஆயினும் அல்லாஹ் அவர்கள் மாறுபட்டுப்
புறக்கணித்துவிட்ட உண்மையின் பக்கம் செல்லுமாறு ஈமான் கொண்டோருக்குத் தன் அருளினால் நேர் வழி காட்டினான்;. அவ்வாறே, அல்லாஹ் தான் நாடியோரை
நேர்வழியில் செலுத்துகிறான்.


இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
'அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறெவருமில்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்' என உறுதி மொழி கூறிய முஸ்லிமான எந்த மனிதரையும் மூன்று காரணங்களில் ஒன்றை முன்னிட்டே தவிர வேறெதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை. 
(அவை:) 1. ஒரு மனிதரைக் கொலை செய்ததற்கு பதிலாகக் கொலை செய்வது. 2. திருமணமானவன் விபசாரம் செய்வது. 3. 'ஜமாஅத்' எனும் சமூகக் கூட்டமைப்பைக் கைவிட்டு, மார்க்கத்திலிருந்தே வெளியேறி விடுவது. 

ஜமாஅத்(جماعة) என்ற அரபுப் பதத்துக்கு கூட்டம் என்று பொருள்படும் புகஹாக்கள் கருத்தின் படி அவர்கள் குர்ரானையும் ,ஹதீதையும் பின்பற்றுபவர்கள் என்றும் கருத்துப்படும் ஆக அந்த கூட்டம் முஸ்லிமான நம் கூட்டம்தான் என்பது தெளிவு .

மேலும்,அல்லாஹ இன்னுமொரு இடத்தில அழகான முஸ்லிம் என்ற வார்த்தையை சொல்லும்போது:

 وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِّمَّن دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
எவர் அல்லாஹ்வின் பக்கம் (மக்களை) அழைத்து, ஸாலிஹான (நல்ல) அமல்கள் செய்து: “நிச்சயமாக நான் (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிபட்ட) முஸ்லிம்களில் நின்றும் உள்ளவன் என்று கூறுகின்றாரோ, அவரைவிட சொல்லால் அழகியவர் யார்?” (இருக்கின்றார்? (41:33)

" كان الناس أمة واحدة فاختلفوا " .  

சுருங்க கூறின், நாம் சற்று நடு நிலமையாக சிந்திக்கும் போது எல்லா இடங்களிலும் முஸ்லிமான கூட்டம்,உம்மத்,ஜமாஅத் என்றே பேசப்படுகிறது மாறாக தனித்துவம்,கட்சி ,கோட்பாடு,கொள்கை என்று எங்கேயும் வலியுறித்தி  கூறப்படவில்லை என்பதுதான் திண்ணம் .

Thursday 2 June 2011

The Marriage


The Holy Quran is evidence that the blessing of marriage is a great blessing bestowed by God upon His slaves, as he said - meaning -: (O people, fear your Lord who created you from a single person, created, including her husband and transmit them many men and women and fear Allah, who asks him and the kinship of God was upon yousergeants) Women 1.
He said - meaning -: (He Who has created man from water, remodeled the marriage relationship, and relationship and your Lord is powerful) Criterion 54, and said - almost all would -: (God made you from your wives, sons and grandsons and sustenance of Medical Care) Bees 72, there are other verses that draw attention to the this blessing.

 
The Yes of God - the Almighty - the slaves that initiated them to be a year of marriage the Court of the ways of the prophets and messengers from Adam peace be upon him to the Seal of the Prophets Muhammad bin Abdullah - peace be upon him

 
He also urged the Prophet to marry interviews many of them saying - peace be upon him -: (O young men, whoever among you can afford married, it is lowering the gaze and guarding one's chastity, and whoever can not fast, it has came) Bukhari and Muslim, Al-Tirmidhi, Ahmad and Bayhaqi from Abu Ayyub al-that the Prophet - peace be upon him - said: "(four-way of the Messengers; modesty and Altattr, marriage, and tooth brushing) and said: (Poor poor man has no woman, even though many money, Poor Poor woman has no husband but was too much money) Tabaraani in the East, told the ruling Mustadrak Anas - may Allah be pleased with him - that the Prophet - peace be upon him - said: (from the living God has helped him with half of his religion, so let him fear the other half) and the conversations in the very many.

 
I'm Uthaymeen said - may God have mercy on him -: marriage as the same project, confirmed in the right of every able person with lust, one of the ways of the Messengers.

 
He added: He married the Prophet - peace be upon him said: (I get married women, it turns away from my Sunnah is not from me) agreed, and therefore some scholars have said: that to marry with lust better than the banal worship, because of its many benefits and good effects, Marriage may be obligatory in some cases, as if the man was a strong desire and fear on the same day of Muharram, if not married, in which case he must marry to keep himself chaste and keep it from doing haraam

Thursday 26 May 2011

இஸ்லாமும் இயற்கை கோட்பாடும்



தவ்ஹீத் التوحيد  -என்பதன் அரபு பதத்துக்கு அல்லாஹ்வை ஒருமை படுத்தல் என்றும்,தப்லீக் ஜமாஅத்- جماعة التبليغ  என்பதன் பொருள் எத்தி வைக்கும் கூட்டம் என்றும், ஜமாத் அல் இஸ்லாமி جماعة الاسلامي  என்பதன் பொருள் இஸ்லாமிய கூட்டம் என்றும்,ஜமாதுல் முஸ்லிமீன் جماعة المسلمين  என்பதன் பொருள் முஸ்லிமான  கூட்டம் என்றும் பொருள் படும்,தயவு செய்து நமக்குள் பிளவு,பிரச்சனை பட்டு கொள்ளாதீர்கள் .மேலும் மத்கப்,அகீதா مذهب சம்மந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளை பொது இடங்களில் எழுத வேண்டாமே ...!
மேல் கூறிய அனைத்து அம்சங்களும் ஒவ்வொரு முஸ்லிம்களிடமும் இருக்க வேண்டியவை தான்   முறையே ஓர் இறைக் கொள்கை,எத்தி வைத்தல்,இஸ்லாமிய கூட்டமைப்பு இதுவல்லாத இன்னும் எத்தனையோ விடயங்கள் இருந்தும் ஏன் ஓரிரு விடயங்களுக்காக மாத்திரம் சண்டை,பிழவு பிடிக்க வேண்டும் ...! 

அல்லாஹ்வின் கயிற்றை  (அல்-குர்ஆன் ) பலமாக பற்றிப்பிடித்துக் கொள்வோம் மாறாக கொள்கை வளர வேண்டும்,கோத்திரம் வளர வேண்டும் என்ற கோட்பாடை எரிந்து விட்டு இஸ்லாம் என்ற ஓர் இறைக் கொள்கையை வளர்ப்போமே..! இது ஒரு முஸ்லிம் இன்னொரு முஸ்லிமுக்கு ஞாபகம் ஊட்டுவதன் மூலம் பிரயோசனம் பெற வேண்டும் எனற கூற்றுக்கேட்ப மாத்திரம் என்று எடுத்துக் கொள்ளவும் .
கீழ் காட்டும் ஹதீத் நல்ல ஒரு எடுத்துக் காட்டாகும்:
ஜரீர் இப்னு அப்தில்லாஹ்(ரலி) அறிவித்தார். 
நபி(ஸல்) அவர்கள் 'விடைபெறும்' ஹஜ்ஜின்போது (மக்களுக்கு உரையாற்றுகையில்) என்னிடம், 'மக்களை மெளனமாக இருக்கச் சொல்லுங்கள்' என்று கூறினார்கள். (அமைதி திரும்பிய பின்னர்) 'எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றொருவரின் பிடரியை வெட்டிக்கொள்ளும் இறைமறுப்பாளர்களாக மாறிவிடாதீர்கள் (
ஒற்றுமையுடன் இருங்கள்)' என்றார்கள்.இந்த ஹதீஸை, நபி(ஸல்) அவர்களிடமிருந்து அபூ பக்ரா(ரலி) இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோரும் அறிவித்தார்கள். 
by:Zuhair Ali




Wednesday 25 May 2011

A Muslim is the brother of a Muslim

Hadith 36 Arabic text

Meanings  



t was related on the authority of Abu Hurairah, radiyallahu 'anhu, that the Prophet, sallallahu 'alayhi wasallam, said:
"Whosoever relieves from a believer some grief pertaining to this world, Allah will relieve from him some grief pertaining to the Hereafter. Whosoever alleviates the difficulties of a needy person who cannot pay his debt, Allah will alleviate his difficulties in both this world and the Hereafter. Whosoever conceals the faults of a Muslim, Allah will conceal his faults in this world and the Hereafter. Allah will aid a servant (of His) so long as the servant aids his brother. Whosoever follows a path to seek knowledge therein, Allah will make easy for him a path to Paradise. No people gather together in one of the houses of Allah, reciting the Book of Allah and studying it among themselves, except that tranquility descends upon them, mercy covers them, the angels surround them, and Allah makes mention of them amongst those who are in His presence. Whosoever is slowed down by his deeds will not be hastened forward by his lineage."

Background
This hadith was recorded by Imam Muslim by the above text. However, there is another version of the hadith where it was recorded by both Imam Muslim and Imam al-Bukhari with the following text:

"A Muslim is the brother of a Muslim - he does not wrong him nor does he forsake him when he is in need; whosoever is fulfilling the needs of his brother, Allah is fulfilling his needs; whosoever removes distress from a believer, Allah removes from him a distress from a distressful aspect of the Day of Resurrection; and whosoever conceals the faults of a Muslim, Allah will conceal his faults on the Day of Resurrection."

We see that in this hadith the obligations towards other Muslims are emphasised and the fulfillment of brotherhood is again stressed.



Friday 13 May 2011

மத்கப் வெறி

தவ்ஹீத் -என்பதன் அரபு பதத்துக்கு அல்லாஹ்வை ஒருமை படுத்தல் என்றும்,தப்லீக் ஜமாஅத்- என்பதன் பொருள் எத்தி வைக்கும் கூட்டம் என்றும், ஜமாத் அல் இஸ்லாமி என்பதன் பொருள் இஸ்லாமிய கூட்டம் என்றும்,ஜமாதுல் முஸ்லிமீன் என்பதன் பொருள் முஸ்லீமான் கூட்டம் என்றும் பொருள் படும்,தயவு செய்து நமக்குள் பிளவு,பிரச்சனை பட்டு கொள்ளாதீர்கள் .மேலும் மத்கப்,அகீதா சம்மந்தப்பட்ட கருத்து வேறுபாடுகளை பொது இடங்களில் எழுத வேண்டாமே ...!

இன்னும் கொள்கை ,மத்கப் வெறிகளை எரிந்து விட்டு ஒரு நாடு நிலையான
போக்கை பின் பற்றலாமே நபி அவர்களின் பொன் மொழிகளை சற்று நோக்குவோம் 

6934. யுசைர் இப்னு அம்ர்(ரலி) அறிவித்தார்.
நான் ஸஹ்ல் இப்னு ஹுனைஃப்(ரலி) அவர்களிடம், 'காரிஜிய்யாக் கூட்டத்தார் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூற ஏதேனும் கேட்டுள்ளீர்கள்' என்று கேட்டேன். அதற்கு அன்னார், நபி(ஸல்) அவர்கள் இராக் நாட்டின் திசையில் தம் கையை நீட்டியவாறு இப்படிக் கூறினார்கள் என்றார்கள்: இங்கிருந்து ஒரு கூட்டத்தார் புறப்படுவார்கள். அவர்கள் குர்ஆன் ஓதுவார்கள். ஆனால், அது அவர்களின் கழுத்தெலும்பை (தொண்டைக் குழியை)த் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியைவிட்டு (அதன் உடலைத் துளைத்த) அம்பு (உடலின் மறுபுறம்) வெளியேறிச் செல்வதைப் போன்று இஸ்லாத்திலிருந்து அவர்கள் (சுவடே தெரியாமல்) வெளியேறிச் சென்றுவிடுவார்கள்.
Volume :7 Book :88

2486. இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஷ்அரீ குலத்தினர் போரின்போது கையிருப்பிலுள்ள பயண உணவு (இருப்பு) குறைந்துவிட்டால் அல்லது மதீனாவில் தங்கள் மனைவி மக்களின் உணவு (இருப்பு) குறைந்து போய்விட்டால் தங்களிடம் (எஞ்சி) இருப்பதை ஒரு துணியில் சேகரித்து, பிறகு, ஒரு பாத்திரத்தைக் கொண்டு சமமாக தங்களுக்கிடையே அதைப் பங்கிட்டுக் கொள்வார்கள். அவர்கள் என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன்.
என அபூ மூஸா அஷ்அரீ(ரலி) அறிவித்தார்.
Volume :2 Book :௪௭

25. 'மனிதர்கள், வணக்கத்திற்குத் தகுதியானவன் அல்லாஹ்வையன்றி வேறுயாருமில்லை; முஹம்மத் இறைத்தூதர் என்று உறுதியாக நம்பி, தொழுகையை நிலை நிறுத்தி, ஸகாத்தும் கொடுக்கும் வரை அவர்களுடன் போரிட வேண்டும் என்று நான் கட்டளையிடப்பட்டுள்ளேன். இவற்றை அவர்கள் செய்து விடுவார்களானால் தம் உயிர், உடைமைகளை என்னிடமிருந்து பாதுகாத்துக் கொள்வார்கள்.. இஸ்லாத்தின் வேறு உரிமைகளில் (அவர்கள் வரம்பு மீறனாலே) தவிர! மேலும் அவர்களின் விசாரணை இறைவனிடமே உள்ளது' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அப்துல்லாஹ் இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :2

எனவே நாம் ஒரு சில ஹதீத்களை மாத்திரம் ஆராய்ந்து பார்க்காமல் சற்று நிதானமாக சிந்திப்போம். 


Saturday 7 May 2011

விருந்தோம்பலும் ஒழுங்கும்

அனஸ் இப்னு மாலிக்(ரலி) அறிவித்தார்.
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து) மதீனாவுக்கு வந்தபோது எனக்குப் பத்து வயது. இறைத்தூதர்(ஸல்) அவர்களின் வாழ்வி(ன் இறுதிப் பகுதியி)ல் பத்தாண்டு காலம் நான் அவர்களுக்குச் சேவகம் செய்தேன். பர்தா தொடர்பான வசனம் அருளப்பெற்றது குறித்து மக்ளில் நானே மிகவும் அறிந்தவனாயிருந்தேன். அது குறித்து உபை இப்னு கஅப்(ரலி) அவர்கள் என்னிடம் கேட்டு(த் தெரிந்து) உள்ளார்கள்.
(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் மணந்து தாம்பத்திய உறவைத் தொடங்கிய சந்தர்ப்பத்தில்தான் (இந்த வசனம்) ஆரம்பமாக அருளப்பெற்றது. நபி(ஸல்) அவர்கள் ஸைனபின் மணாளராக இருந்தபோது (வலீமா - மணவிருந்துக்காக) மக்களை அழைத்தார்கள். மக்கள் வந்து சாப்பிட்டுவிட்டு வெளியேறினர். அவர்களில் ஒரு குழுவினர் மட்டும் (எழுந்து செல்லாமல்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அரும்லேயே நீண்ட நேரம் இருந்தனர். அவர்கள் வெறியேறட்டும் என்பதற்காக இறைத்தூதர்(ஸல்) அவர்கள் வெளியேறினார்கள். நானும் அவர்களுடன் வெளியேறினேன். இறைத்தூதர்(ஸல்) அவர்கள் நடக்க, நானும் அவர்களுடன் நடந்தேன். இறுதியில் ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். பிறகு அக்குழுவினர் வெளியேறிப்பார்கள் என்று எண்ணியவாறு இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (ஸைனப் அவர்களின் இல்லத்திற்குத்) திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். ஸைனப்(ரலி) அவர்களிடம் வந்தபோது அந்தக் குழுவினர் கலைந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்து கொண்டிருந்தார்கள். இதைக் கண்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (மீண்டும்) திரும்பி வந்தார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். (இப்போதும்) ஆயிஷா(ரலி) அவர்களின் அறையின் நிலைப்படிக்கு வந்தார்கள். அக்குழுவினர் வெளியேறியிருப்பார்கள் என்று நினைத்துக் கொண்டு மீண்டும் திரும்பினார்கள். நானும் அவர்களுடன் திரும்பினேன். அப்போது அந்தக் குழுவினர் வெளியேறிச் சென்று விட்டிருந்தனர். அப்போதுதான் பர்தா தொடர்பான (திருக்குர்ஆன் 33:53 வது) இறைவசனம் அருளப்பெற்றது. உடனே எனக்கும் தமக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் திரையிட்டார்கள்.14 

(6238 Al-bughari)
Volume :6 Book :79



மற்றுமொரு  அறிவிப்பில். 
நபி(ஸல்) அவர்கள் ஸைனப் பின்த் ஜஹ்ஷ்(ரலி) அவர்களை மணமுடித்துக்கொண்டபோது மக்கள் வந்து (வலீமா - மணவிருந்து) உண்டுவிட்டு, பிறகு (எழுந்து செல்லாமல் அங்கேயே) அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். நபி(ஸல்) அவர்கள் எழுவதற்குத் தயாராவதைப் போன்று காட்டலானார்கள். ஆனால், மக்கள் எழுந்தபாடில்லை. இதைக் கண்டபோது நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றார்கள். நபி(ஸல்) அவர்கள் எழுந்து சென்றபோது மக்களில் சிலரும் எழுந்து சென்றனர். மற்றவர்கள் அமர்ந்து கொண்டிருந்தார்கள். (வெளியில் சென்றுவிட்டு) நபி(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைய வந்தபோது அந்தச் சில பேர் (அப்போதும்) அமர்ந்துகொண்டேயிருந்தார்கள். (சிறிது நேரத்திற்குப்) பிறகு அவர்களும் எழுந்து நடந்தார்கள். (மீண்டும் வெளியில் சென்றிருந்த) நபி(ஸல்) அவர்களிடம் நான் (சென்று அந்தச் சிலர் எழுந்து சென்றுவிட்டதைத்) தெரிவித்தேன். அப்போது நபி(ஸல்) அவர்கள் வந்து (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். (அவர்களுடன்) நானும் நுழையப் போனேன். அப்போதுதான் எனக்கும் தமக்குமிடையே நபி(ஸல்) அவர்கள் (ஹிஜாப்) திரையிட்டார்கள்.
மேலும், உயர்ந்தவனான அல்லாஹ் 'இறைநம்பிக்கையாளர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டாலும், அப்போதும் கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும்போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்பதில் ஆர்வமாய் இருந்துவிடாதீர்கள். நிச்சயமாக உங்களின் இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை' எனும் (திருக்குர்ஆன் 33:53 வது) வசனத்தை அருளினான்.
அபூ அப்தில்லாஹ் (புகாரீயாகிய நான்) கூறுகிறேன்:
'விருந்தளிப்பவர் (அவையிலிருந்து) எழுவதற்கும் வெளியே செல்வதற்கும் விருந்தாளிகளிடம் அனுமதி கேட்க வேண்டியதில்லை' என்றும், 'விருந்தாளிகள் எழுந்து செல்லட்டும் என்ற நோக்கில் தாம் எழுந்து போகத் தயாராவது போல் காட்டலாம்' என்றும் இந்த ஹதீஸிலிருந்து (நமக்கு) மார்க்கச் சட்டம் கிடைக்கிறது. 

Sunday 24 April 2011


இஸ்லாத்தின் எளிமை,அதன் அறிவுபூர்வமான    
  நடைமுறைக்கேற்ற அமைப்பு


     இஸ்லாம் புராணங்கள்,கட்டு கதைகள் ஏதுமில்லாத ஒரு நெறியாகும்.அதன்அறிவுரைகள் எளிதானவையும் எளிதில் புரிந்துகொள்ளத்
 தக்கவையுமாகும்.அது எவ்வித மூடநம்பிக்கைகளையும் பகுத்தறிவுக்கொவ்வாத   நம்பிக்கைகளையும் விட்டுதூய்மையானதாகும்.இஸ்லாத்தில் மதகுருமார்களின் ஆதிக்கம் கிடையாது.நடைமுறை வாழ்வுக்கும் மனிதத்தேவைகளுக்கும் தொடர்பில்லாத வெற்று தத்துவங்களுக்கும் பயனற்ற சடங்குகளுக்கும் அதில் இடமில்லை.புரிந்துகொள்ள முடியாத  சிக்கலான சடங்குகளும் சம்பிரதாயங்களும் அதில் இல்லை.ஒவ்வொரு மனிதனும் இறைவனின் திருமறையை  நேரடியாக  அணுகி அதன் வழிகாட்டுதலில் இருந்து பயனடைய முடியும்.                                                                                                                                                                                                 இஸ்லாம் மனிதனின் பகுத்தறியும்  ஆற்றலைத் தட்டி எழுப்புகின்றது.அவனை தனது அறிவாற்றலைப்பயன்படுத்தும்படி தூண்டுகின்றதுஎந்த ஒரு விஷயத்தையும் அதன் எதார்த்த நிலையின் வெளிச்சத்தில்,அதன் விரிவான பின்னணியில் பார்க்கும்படி  சிந்திக்கும்படி கட்டளையிடுகின்றது."என் இறைவா என் அறிவை அதிகப்படுத்தியருள் "(20௦:114)என்று பிராத்திக்கும்படி மனிதனுக்கு திருக்குர்ஆன் அறிவுறுத்துகிறது."அறிவில்லாதவர்கள்,அரிவுடையோர்க்குச் சமமாக மாட்டார்கள்"(39:9)என்று அது அழுத்தந்த்திருத்தமாகக் கூறுகின்றது.சிந்திக்க மறுப்பவர்களை "மிருகங்களைப் போன்றவர்கள் ;ஏன் அவற்றை விடவும் தாழ்ந்தவர்கள் "(7:179)என்று இடித்துரைக்கிறது.             

Saturday 16 April 2011

கலிபாக்கள் எழுச்சி

முகம்மது நபி இறந்தபொழுது அவரது ஆட்சியின் கீழ் மொத்த அரேபிய தீபகற்பமும் இருந்தது. அதற்கு அவருக்கு பிறகு அதை ஆளுவதற்க்கு அபூபக்கர் (ரலி) எனபவர் நியமிக்கப்பட்டார். இவருக்கு பிறகு உமர் (ரலி)உசுமான் (ரலி)மற்றும் அலீ (ரலி) ஆகியோர் ஆட்சி செய்தனர். இவர்கள் நால்வரும் றாசுதீன் கலிபாக்கள் என அழைக்கப்படுகின்றனர்.இவர்களுக்கு பிறகு உமய்யா கலிபாக்கள் மற்றும் அப்பாசிய கலிபாக்கள் ஆகியோர் இஸ்லாமிய  பேரரசை உலகில் விரிவுப்படுத்தினர். இவர்களின் ஆட்சியின் கீழ் அரேபிய தீபகர்ப்பம், வடக்கு மற்றும் வடமேற்கு ஆப்பிரிக்கா, மத்திய ஆசியா, ஆப்கானிசுத்தான், சிந்து மற்றும் போர்ச்சுக்கல்எசுப்பானியா ஆகிய பகுதிகள் வந்தன. இந்த பகுதிகளில் எல்லாம் இஸ்லாம்  வேகமாக பரவியது. குறிப்பாக அப்பாசிய கலிபாக்கள் ஆட்சிகாலம் 'இஸ்லாமின் பொற்காலம்' என அழைக்கப்படுகின்றது. இந்த காலத்தில் இஸ்லாம் கலை மற்றும் அறிவியல் ஆகிய துறைகளிலும் செழித்து வளர்ந்தது. துருக்கியின் ஒட்டாமன் பேரரசின் எழுச்சிக்குப்பிறகு பிறகு, கலிபாக்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது.