Monday 2 December 2013

அரபுக் கலாசாலைகளும் அனாதரவற்ற உலமாக்களும் ..!


மனித குலத்திற்கு வழிகாட்டியாக அனுப்பபட்ட மாநபி[ஸல்] அவர்களுக்கு அல்லாஹ் இறக்கிய முதல் வசனமே 'படிப்பீராக' என்பதாகும்.

இவை அனைத்துக்கும் மேலாக, முதன் முதலாக இறங்கிய அல்குர்ஆனின் வசனங்களே அறிவைப் பற்றியும் அறிவின் அடிப்படைகளாகத் திகழும் வாசிப்பு, எழுத்து, எழுதுகோல் பற்றியும் பேசுவதைப் பார்க்கின்றோம்.
''(நபியே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக! அவனே மனிதனை இரத்தக் கட்டியிலிருந்து படைத்தான். நீர் ஓதும், உமது இறைவன் மாபெரும் கொடையாளி, அவன்தான் எழுதுகோலைக் கொண்டு கற்றுக் கொடுத்தான். மனிதன் அறியாதவற்றையெல்லாம் கற்றுக் கொடுத்தான்.'' (96:1-5)

கற்றலை உள்வாங்கும் பலம் பொருந்திய புலன்களில்  கட்புலன்,செவிப்புலன்,முகர் புலன்,சுவைப்புலன்,தோல் உணர்வுகள் பிரதானம் எனினும்   உறுப்புக்களிற் கண் சிறப்பிடம் பெறும். வெறுமனே ஒரு நிழற்படக் கருவியின் செயல்களை மாத்திரம் கண்கள் புரியவில்லை. அறிகைச் செயல் முறையில் கண்கள் மூளையுடன் இணைந்து செயற்படுகின்றன.

ஒலியின் செறிவு, அதன் இயக்கவீச்சு, அடிப்படை சுருதி, பேசும் விகிதம் முதலியவை செவிப்புலன் தழுவிய கற்றலின் மீது செல்வாக் குச் செலுத்துகின்றன. ஒலி அலைகள் குறிப்பிட்ட அளவு மீடிறன் களையும் செறிவையும் கொண்டுள்ளன. ஒழுங்கற்ற முறையில் இடம்பெறும் பல்வேறு மீடிறன்களைக் கொண்ட ஒலி அலைகள் இசைவற்ற சத்தங்கள்என்று குறிப்பிடப்படும்.

அறிவின் மூலம் அன்புஎன்ற விழுமியம் வளர்த்தெடுக்கப்படு கின்றது. அணிலின் மீது அன்பு, நண்பர்கள் மீது அன்பு கட்டியெழுப் பப்படுகின்றது. அணில் பிள்ளையின் தாவிய பாய்ச்சல் நடிப்பு முறையிலே பாலர்களுக்குக் குதூகலத்தை வருவிக்கும். இசைவாக்கச் செயல்முறையில் சாதுவான விலங்குகள் மனிதருக்கு ஒத்துழைப்புத் தரும் என்ற எண்ணக்கரு அணில் பழங்களைப் பறித்துத் தருவதன் வாயிலாக வலியுறுத்தப் படுகின்றது.

சமூகத்தின் இயல்பு, அதன் அடிக்கட்டுமானம், சமூக உறவுகள், சுரண்டற் கோலங்கள், சமூகத்தின் ஒடுக்குமுறை இயல்பு முதலியற்றின் கூட்டு மொத்தமான விளைவாக எழுவதே கேடுறுத்தல் ஏற்படுகின்றது என்பதைச் சமூகவியற் காட்டுரு விளக்குகின்றது.

பொதுவாக இலங்கையின் அரபுக் கல்லூரிகள் ஆறு அல்லது  ஏளு வருட கற்கை நெறியைக் கொண்ட ஒரு இஸ்லாமிய ஷரீஅ அடிப்படையிலான பாடத்திட்டமாகும் இன்று இது போன்ற கல்லூரிகள் எல்லா மூளை முடுக்கிலும் விரிந்து செறிந்து கிடக்கின்றன. சில ஊர்களில் காலையில் பள்ளிவாசல் இமாம் ஓதிக்கொடுக்கும் மதரசாவிற்கு செல்லும் பிள்ளைகளை பார்த்தால் தூங்கிய முகத்தோடு, கிழிந்த அல்-குர்ஆணை எடுத்துக்கொண்டு வேண்டா வெறுப்பாக செல்வதை பார்க்கலாம். அதே நேரத்தில் உலக கல்வி கற்க பள்ளிக்கு செல்லும்போது குளித்துமுழுகி, பவுடரடித்து, சீருடை அணிந்து அழகாக செல்வதை காணலாம். இதற்கு காரணம் அந்த பிள்ளைகளல்ல; பெற்றவர்கள்தான், அதட்குக் கூட மரியாதை இல்லாமல்…!

பெயர் சொல்லி பிரபலமான ஒரு சில சமூக,விரிந்த சிந்தனை கொண்ட அரபுக் கல்லூரிகள்  இருக்கவே செய்தாலும் அவை வெவ்வேறு பாடத் திட்டங்களை கொண்டுள்ளமை எமக்கு பெரும் வருத்ததத்தையும்,இன்றைய உலமாக்கள் எதிர் கொல்லும் பிரச்சினைக்களைப் பார்த்தால் வேதனையே.எது எவ்வாறாக இருந்தாலும் வருடத்த்துக்கு வருடம் பல ஆயிரக்கணக்கான உலமாக்கள் பட்டம் பெற்று வெளியாகின்றனர் அது உள்ளமயில் மகிழ்ச்சியான  எம் இச் சீறிய தீவில் பாரிய பங்களிப்பை செய்யும் என்பதில் ஐய்யமுமில்லை.

எனினும் பல சமூக அளவிலான பிளவுகளும் அத்தோடு இணைந்து காணத்தான் செய்கின்றது ஏனனில் உதாரணமாக 'வெவவ்வேறு பாடவிதனை கொண்ட கல்லூரிகளில் இருந்து பட்டம் பெரும் மௌளவிமார்கள் ஒவ்வொரு கொள்கையை சொல்லும் போது மக்கள் மாத்திரமன்றி அறிவுள்ளோர் கூட குழம்பும் அளவுக்கு பல பிரச்சினகலை உண்டாக்கின்றன.

மாத்திரமன்றி இங்கு படித்து வெளியாகும் உலமாக்கள்  பல பிரச்சினைக்கும் பிளவுகளுக்கும் உள்ளாகின்றனர் உதாரணத்துக்கு .. அவர்களது மேற்படிப்பு,வேலை வாய்ப்பு,குடும்பப் பிரச்சினை போன்ற தனி நபர் மற்றும் சமூக பிரச்சினைகளை எதிர் நோக்கின்றனர்.

அது மாத்திரமன்றி சுமார் ஆறு அல்லது ஏழு வருட காலம் ஒரு சாதாரண டிப்ளோமா சான்றிதழை அடைவதற்குள் யா அல்லாஹ் ..! இத்தனை  வருடங்கள் தேவையா என்ற கேள்வி எழுகின்றது? எனினும் ஏழு வருடம் மிகவும் அதிகம் அதனை சுருக்கி ஐந்து வருடமாக்கினால் இன்னும் நன்றாக இருக்கும்.

வெறுமேன அந்த சான்றிதழை வைத்து இலங்கை தீவில் மேல் படிப்பு அல்லது தொழில் வாய்ப்பு போன்ற இந்னோரான்னா தேவைகளுக்கு பயன் படுத்த முடியாத இந்த சான்றிதல் தேவைதானா என்று ஒரு சில பெற்றார்கள் கேட்கத்தான் செய்கின்றனர…? 

இன்று உளமக்கள் பல சவால்களுக்கு மத்தியில் வாழ்கின்றார்கள் என்றால் மறுக்கு முடியாத ஒன்று அதட்கான தீர்வுகள் உண்டு எனினும் அரச தலைவர்கள்,மூத்த உலமாக்கள்,அதிகார்கள்,கல்லூரி அதிபர்கள் ஒன்றிணைந்தால் நிச்சயம் ஒரு பாடத் திட்டத்தையும் நல்லதொரு தீர்வையும் கண்டு பிடிக்கலாம. 

புதிய அரபுக் கல்லூரிகள்,அல்லது புதிய பள்ளிவாயல்கள் கட்டுவதை விட்டு நாம் இருக்கும் கலாசாலைகளை கட்டியெழுப்ப முயல வேண்டும்;அதன் மூலம் பல புதிய பாடத்திட்டங்கள்,வேற்று மொழி கற்பித்தல்,சமயங்கள் ஆராய்வு  செய்தல; போன்ற சமகால உலக நடப்புக்கு ஏற்றமான கல்வியை அறிமுகப்படுத்த வேண்டும் அது ஓர் அரபுக் கல்லூரியல் மாத்திரம் முடியாத காரியம் ஆக சகல அதிபர் பீடாதிபதி மார்கள் மூலம் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

இன்று அவர்கள் வெறுமன இஸ்லாத்தை மத்திரம் அறிந்து வைத்தால் போதாது ஆக ஒரு நாள் அவர்கள் இஸ்லாமிய அறிவுடன் ஒரு கிலாஃபத்த்தை எற்படுத்துவதற்கான ஒரு தலைவரக மாற்ற வேண்டும்.  நாம் ஒன்று சேர்ந்து இவ் உலமாக்களுக்கு ஒரு நல்ல முடிவை எடுக்க வேண்டும் என்ற துஆவுடன் ,,! 

Zuhair Ali (Ghafoori-UoC)