Monday 23 September 2013

மிருதுவாய் உதித்த எம் கொள்கை இஸ்லாமே...!


மனித குல தொடக்கம் தொட்டே  இஸ்லாமும் தோன்றி விட்டது என்பது தான் திருக்குர்ஆனிலிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் அறிவுரைகளிலிருந்தும் பெறப்படும் உண்மையாகும்,ஆரம்ப மனிதன் ஆதம் (அலை)  முதல் ஆகிர் நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரையும் இஸ்லாம்தான் வெவவேறு வேதங்களிலும்,மொழிகளிலும் போதிக்கப்பட்டது எனலாம்,இன்றும் ஒரே தீன் இஸ்லாம்தான் என்பதில் வேற்றுக் கருத்தோ,மாற்றுக் கருத்தோ கிடையாது,அதனை இவ்வாறு ஆல் குர்ஆன்:

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும்; வேதம் கொடுக்கப்பட்டவர்கள் (இதுதான் உண்மையான மார்க்கம் என்னும்) அறிவு அவர்களுக்குக் கிடைத்த பின்னரும் தம்மிடையேயுள்ள பொறாமையின் காரணமாக (இதற்கு) மாறுபட்டனர்; எவர் அல்லாஹ்வின் வசனங்களை நிராகரித்தார்களோ, நிச்சயமாக அல்லாஹ் (அவர்களுடைய) கணக்கைத் துரிதமாக முடிப்பான் (3:19)

கொள்கை என்பது ஒரு இலக்கை அடைவதற்கு பின்பற்றப்படும் வழிமுறையையும் ஒழுக்க விதிகளையும் குறிக்கும். இந்த சொல் அரசு, நிறுவனங்கள், குழுக்கள், தனிநபர்கள் என வெவ்வேறு நிலைகளில் பயன்படுகிறது. முகம்மது நபிக்கும் அவருக்கு முன்னால் வந்துசென்ற வேறுசில தூதர்களுக்கும் வேதங்கள் கொடுக்கப்பட்டன என நம்புதல் மற்றொரு இஸ்லாமிய கடமையாகும். தவ்ராத்சபூர்இஞ்சில் ஆகியவை முறையே மூசாதாவூத்ஈசாஆகிய இறைதூதர்களுக்கு கொடுக்கப்பட்ட வேதங்களாக குரானில் குறிப்பிடப்பட்டுள்ளதுமேலும் இவை காலப்போக்கில் மனிதர்களினால் திருத்தப்பட்டதாகவும் அதனாலேயே,இறுதியானதாகவும்,திருத்தப்பட முடியாததாகவும் முகம்மது நபிக்கு குரான் வழங்கப்பட்டதாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது-“…….அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம்" (அடிபணிதல்) என்றால் என்ன?" என்று அவர் கேட்டார். நபி (ஸல்) அவர்கள், இஸ்லாம் என்பது அல்லாஹ்வை நீங்கள் வணங்குவதும், அவனுக்கு நீங்கள் எதையும் இணைவைக்காமலிருப்பதும், கடமையான தொழுகையைக் கடைப்பிடிப்பதும், கடமையான ஸகாத்தை நிறைவேற்றி வருவதும், ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பதும் ஆகும்" என்றார்கள்.

சில பல்வழிபாட்டு வேதங்களைப் போல சாதிக்குள் சாதி அவற்றுள் தனித்தனி நீதிஎன சாதிச்சண்டைகளும், வர்ணாசிரம முறைகளால் கீழ்சாதி மேல்சாதி எனப்பிரித்து, மனித உரிமைகள் பறிக்கப்பட்டு ஆடு மாடு மிருகங்களை விட மோசமான வர்களாக-தீண்டத்தகாத வர்களாக நடத்தப்படும் அவல நிலைகளையும் வேற்று மதங்களில் பார்க்கமுடிகிறது,ஆனால் இனிய இஸ்லாத்தில் அப்படியான வேறு பாடு இல்லை என்பது யாவரும் அறிந்ததே.

நால் பெரும் இமாம்களிடம்  கூட சிறு கருத்து வேறு பாடு இருந்தாலும் அவற்றை தூக்கிப் பிடித்துக் கொள்ளச் சொல்லவில்லை

ஹனபி மத்ஹப்:
எந்த ஆதாரத்தின் அடிப்படையில் நாம் முடிவு செய்தோம் என்பதை அறியாமல் எங்கள் சொல்லை எடுத்து நடப்பது எவருக்கும் ஆகுமானது (ஹலால்) இல்லை."[அல்லாஹ்வுடைய வேதத்துக்கும் (குர்ஆனுக்கும்) நபி(ஸல்) அவர்களின் சொல்லுக்கும் மாற்றமான ஒன்றை நான் சொன்னால், என் சொல்லை விட்டு விடுங்கள்! 

ஷாபி மத்ஹப்:
எவராக இருந்தாலும் அவரை விட்டும் ரஸூல்(ஸல்) அவர்களின் வழிமுறைகளில் ஏதேனும் (சில) தவறி விடத்தான் செய்யும். நான் ஏதேனும் ஒரு சொல்லைச் சொல்லும் போது, அல்லது ஏதேனும் ஒரு அடிப்படையை வகுத்துத் தரும்போது, அல்லாஹ்வின் திருத்தூதருடைய கூற்றுக்கு மாற்றமாக அது இருந்தால், ரஸூல்(ஸல்) அவர்கள் கூற்றை ஏற்பதே எனது கொள்கையுமாகும்.

மாலிக்கி மத்ஹப்
நான் (சில நேரங்களில்) சரியாகவும், (சில நேரங்களில்) தவறாகவும் முடிவெடுக்கக் கூடிய ஒரு மனிதன் தான், எனது முடிவுகளை நீங்களும் ஆராயுங்கள். குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமானவற்றை எடுத்துக் கொள்ளுங்கள்! குர்ஆனுக்கும், நபி வழிக்கும் பொருத்தமில்லாதவைகளை விட்டு விடுங்கள்."

ஹம்பலி மத்ஹப்
"என்னையோ, மாலிக், ஷாபீஈ, அவ்ஸாயீ, ஸவ்ரீ போன்ற (இமாம்களையோ) பின்பற்றாதே! அவர்கள் எதிலிருந்து புரிந்து கொண்டார்களோ (அந்தக் குர்ஆன், ஹதீஸ்களிலிருந்து ) நீயும் புரிந்து கொள்! 

மேற்கண்டவாறு இஸ்லாமிய மூத்த உலமாக்களின் நான்கு சட்டத்தொகுப்புகளைப் பிரபல்யமாக கொண்டிருந்த போதிலும், இவைகளின் அடிப்படை கொள்கைகள் ஒன்றே ஆகும். இவை திருக்குர்ஆனிலிருந்தும் முகம்மத் நபி (ஸல்) அவர்களின் சுன்னாவிலிருந்தும் மட்டுமே எடுக்கப்படுகின்றன.,இம் மாபெரும் மேதைகள் நினைத்திருந்தால் அவர்களது மத்ஹப்கலை பரப்பி இருக்கலாம்,ஆனாலும் அவர்கள் பணிவுடன் வேண்டிய போக்கு மேலும் இஸ்லாம் வளர்வதட்கு ஒரு நரம்பு எனக் கூட சொல்லலாம்.
எனவே உம்மத் சமூகம்,இஸ்லாம் ஒற்றுமைப்படவேண்டுமாயின் இஸ்லாத்திற்கு அன்னியமான மேற்கினது சிந்தனைகளான தேசியவாதம் களையப்பட்டு உம்மத் மற்றும் சகோதரத்துவ சிந்தனை ஊட்டப்படவேண்டும்! இஸ்லாம் பெரிதும் முழு உலகத்திலும் வளர்ந்து கொண்டு இருக்கும் இந்த தருணத்தில் கொள்கை,கோட்பாடு  வளர்க்கவேண்டும் என்ற வாதம் முற்ரிலும்  நிராகரிக்கப்பட வேண்டிய ஒரு அடி மட்டமான கருத்தாகும்,2010-ல் 232 நாடுகளில் எடுக்கப்பட்ட ஒரு ஆய்வு, மொத்தம் 1.57 பில்லியன் மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாக கூருகின்றது. இது மொத்த உலக மக்கள் தொகையில் 23% ஆகும்.

சுஃப்யான் பின் அப்தில்லாஹ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
நான் "அல்லாஹ்வின் தூதரே! இஸ்லாம் குறித்து (சுருக்கமாக) எனக்கு ஒரு விளக்கம் அளியுங்கள். "தங்களுக்குப் பிறகு யாரிடமும்" அல்லது "தங்களைத் தவிர வேறு யாரிடமும்" அது குறித்து நான் கேட்க வேண்டிய திருக்கலாகாது" என்று வினவினேன்,அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ""அல்லாஹ்வின் மீது நான் நம்பிக்கை கொண்டேன்" என்று கூறி, அதில் உறுதியாக நிலைத்து நிற்பீராக!" என்று சொன்னார்கள்.
இந்த ஹதீத் கூட எந்த ஒரு கொள்கை சார்பாக கேட்கவில்லை மாறாக இஸ்லாம் என்ற சொல்லே உபயோகிக்கப்பட்டு இருக்கிறது இவ்விடத்தில் மாத்திரமல்ல இன்னும் எல்லா சந்தர்ப்பத்திலும் இஸ்லாம் என்றே கூறப்படுகிறது.நாம் மறுமையில் கேட்கப்படும் கேள்விக்கு இஸ்லாம்தான் என் மார்க்கம் என்றுதான் சொல்லப் போகிறோம்.

இஸ்லாத்தையும் அதன் தனித்துவத்தையும் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம்தான் நம்மில் ஊறி,ஊண்டி இருக்க வேண்டுமே தவிர எம் கொள்கையில் அங்கத்தவர் சேர்க்கவேண்டும், கொடி பறக்க வேண்டும் என்ற இலக்கு இருக்குமாயின் இன்னும் நாம் பின் தங்கிய,தள்ளிய சமூகமாகவே இருப்போம் ‘’இளகின இரும்பைக் கண்டால் கொல்லன் ஓங்கி அடிப்பான்’’என்பது போல சந்தர்ப்பம் பார்த்த்திருக்கும் கயவர்களிடம் இருந்து நம் சமூகத்தை பாது காக்கவேண்டும்.

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (3:85)

தனி மரம் நட்டிய நாம் இன்று பல மரங்களையும்,கிளைகளையும் நட்டியும், அங்கனம் இஸ்லாம் என்ற கொள்கையை வளர்க்க நெறியிட்ட நாம் பல கொள்கைகளையும்,பிரிவுகளையும் வளர்த்துக் கொண்டோம்,இனியும் போதும் இந்த வெறியாட்டம்…! ஆயிரம்தான் சொன்னாலும் நான் அந்த வாதிதான் என்று வாதிடாமல் வாருங்கள் இஸ்லாம் என்ற ஒற்றைக் கொடியை ஒழுங்காய் நட்டி உலக முழுதும் கட்டி எழுப்புவோம்.

இஸ்லாம் ஒரு நாட்டுக்கோ அல்லது சமூகத்துக்கோ சொந்தம் கொண்டாட முடியாது அது எதிரிப்,பாரசீகம்,ஸ்பைன், சிந்து நதியினிலே,நைல் நதியினிலே,புனித பூமியிலே பறந்தோடி பாலுலகம் எங்கும் பல வரலாறுகளை படைத்திருக்கின்றன,இன்று இஸ்லாம் மேற்கிலும்,கிழக்கிலும் கொத்துக் கொத்‌தாய்,கிளை கிளையாய் என பரவிக் கொண்டிருக்கையில் நாமே இலைகளை உதிர்த்து சருகுகளாய் ஆக்கிக்கொள்ள வேண்டும்..!

இச் சிறு தீவினில் இவ்வளவு இயக்கங்களும்,கோட்பாடுகளும்,வேறுபாடுகளும் இருப்பதை நினைத்து நம் சமூகம் கவைலைப் பட்டாலும்,அந்நிய சமூகம் நம்மைப் பார்த்து கை கொட்டி சிரிப்பதை பார்க்கும்போதுதான் வேதனையும்,சோதனையும்.

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்ககொள்ளப்பட்ட) மார்க்கமாகும் (3:19)

இஸ்லாம்தான் எமது கொள்கை,கோட்பாடு ஆக இஸ்லாத்தை வளர்க்க வேண்டும் என்ற எண்ணமும்,நோக்கமும் நமக்குள் ஆளப் பதிந்து ஆலம் முழுதும் இஸ்லாமியம் வளரட்டும் என்ற துவாவுடன் ...! வளரட்டும் இஸ்லாம் ….!


Thanking you,

Zuhair Ali (Ghafoori-UoC)



Monday 16 September 2013

கிழக்கில் நட்டிய மரம் இன்னும் பூக்கவில்லையே....!


தலைவா நம் விடியலுக்காய் வித்திட்டு
நட்டிய மரம் ஒய்யார வளர்ந்தும் வித்துப்
பிழைக்கும் மாமரமாய் ஆகி,

மண் வாசனை அறியா மந்திரிமார்கள் 
பொன்னுக்காய் பிரித்து பல கிளைகளாய் 
புரியா கட்சிகளை உண்டாக்கி...,

புகழ் வேண்டும் என்று பதவிக்காய் 
இதழ் சிரித்து இன்பம் காண்கிறார்களே..! 


பட்ட மரம் கல்லெறி படுவது போல் 
பச்ச மரம் பொல்லெரி படுகிறதே..!

முஸ்லிம் தனித்துவத்துக்காய் தனி
மரம்வேண்டும் என்று கிழக்கில் நட்டிய மரம்
இன்னும் பூக்கவில்லையே...!

தலைவா...! சொன்னாய் ….

ஆலமரமாய்
ஆயிரம்
 விழுதுகளுடன் நமது மரம்
வாழவேண்டும்
 - அதை 
வாழ்விற்கப்
 புறப்படுங்கள்...! என்று

ஆம்,ஆயிரம் விழுதுகளுடன் வாழ
வேண்டும் என்றாய் ! இன்று ஆறாயிரம்
விருதுகளுக்காய் போட்டி போடும் நம்
தலைமைகள் ...!


இந்த மரத்தை எங்கு வெட்டி,
விழுத்தாட்டப் போகிறார்களோ என்ற பீதியுடன்,
அந்த கிழக்கில் உதித்து மேற்கில் புதைத்த தலைவனுக்கு
நாம் கொடுக்கும் பரிசு பூக்காத இந்த மரமோ...!

நம் சமூகம் காய்,கனிகளை உண்டு ஒன்றாய்,
அம் மரத்தின் நிழலில் ஓய்வு எடுப்பார்கள்
என்று எண்ணினோம்….!

எங்கே இவர்கள்தான் இன்னும்
பூக்கவே விடவில்லையே…..!


பட்டுப் போகும் அந்த மரத்த,,
பத்துப் பேரேனும் சேர்ந்து தண்ணீர் ஊற்ற
புறப்படுங்கள் எம் முஸ்லிம் தலைவர்களே,,!


Thank you,

Zuhair Ali (Ghafoori-UoC)






Tuesday 10 September 2013

குறை கூவி நிறை காணும் நம் சமூகம்...!

பிராது என்கிற வார்த்தைக்கு முறையீடு, குற்றச்சாட்டு, புகார், குறை கூறல் என்பது பொருள்,இயல்பு வாழ்க்கையில் மக்கள் தங்கள் புகாரினை நீதிமன்றத்தில் முறையிடுவது போல, சிறு,சிறு தவறுகளை குறை கூறி நிறை கண்டு  எம் முஸ்லிம் சமூகத்த்தை பின் தள்ள முயற்சிக்கும் ஒரு கதவு என்று கூட சொல்லலாம்.


பொதுவாக எம்மிடத்தில் ஒரு அற்ப விடயத்தை எடுத்தாலும் சரி ஏதேனும் ஒரு குறை கூறியே நிறை காண்பவர்கள் எம்மில் அதிகம் அது இன்று அரசியல் ரீதியான,கொள்கைரீதியான இன்னும் பல சமூக ரீதியான குறைகளாக இருந்து கொண்டே இருக்கிறது என்றால் அது உண்மைதான்தனி மனித குறை கூவல் இன்று சமூக குறைகளாக மாற்றி ஒரு சமூகத்தையே அளிப்பதற்கும்,அம்பலப்படுத்தும் பழக்க,வழக்கில் எடுத்துக்கொண்டனர்.

 ‘’குறை சொல்லி புறம் பேசித் திரியும் ஒவ்வொருவனுக்கும் கேடுதான்.’’(அல் குர்ஆன் 104:1)-என்றெல்லாம் இஸ்லாம் அழகுற எடுத்துச் சொன்னாலும் நமக்குள் குறை கூவி நிறை காணும் வியாதி ஆளப்பதிந்தே  இருக்கின்றது.

சில வேளைகளில், சில சம்பவங்களும் சில வார்த்தைகளும்நம்முடைய வாழ்க்கையே திசை திருப்பிவிடக்கூடியவை நம்மை சுற்றி இருப்பவர்கள் பெரும்பாலும் சந்தனங்களையும் சகதிகளையும் நமது உடலிலும் முகத்திலும் பூசிவிட்டுத்தான் செல்கிறார்கள். அப்போது நமது உண்மைத்தோற்றம் வெளிப்பட வாய்ப்பே இல்லை,இந்நிலையில் சந்தனமும் சகதியும் ஒன்றுதான். 

தன்னை உணர்ந்த ஒருவனால்தான், மற்றவர்களின் உணர்வுகளையும் உணர முடியும். தன்னை புரிந்து கொண்டவனால்தான், மற்றவர்களின் உணர்வுகளையும் புரிந்துகொள்ள முடியும். ஒருவனுக்கு, அவனுக்கு வெளியில் இருக்கும் உலகை விட உள்ளே இருக்கும் உலகம் மிகப்பெரியது. அதைத்தான் சுயம் என்பது. அவனது சுயத்தை அவன் அங்குதான் உணர முடியும்

. வெளி உலகில் இருந்து வரும் சில புகழ்ச்சிகளும், இகழ்ச்சிகளும் நமது உள் உலகை காண விடாமல் தடுத்துவிடுகிறது. நமக்கு வெளியில் நிகழும் சம்பவங்களையும் வார்த்தைகளையும் நம்மால் தடுக்க முடியாது,புகழ்ச்சி என்பது வேறு. உற்சாகப்படுத்துதல், பாராட்டுதல் என்பது வேறு.இகழ்ச்சி என்பது வேறு, தவறை உணரசெய்தல் என்பது வேறு. குறை கூறல் என்பது வேறு, தவறை சுட்டிக்காட்டுதல் என்பது வேறு. நம்மை நோக்கி வருபனவை இவற்றில் எவை, என்பதை சரியாக அடையாளம் கண்டுகொள்வது மட்டுமல்லாது, நாம் மற்றவர்களுக்கு செய்பவை மேற்கண்டவற்றில் எவை, என்பதனையும் கருத்தில் கொள்ளவேண்டும்.

உலகின் குறைகளை பற்றி பேசாதே. குறைகளை நோக்கி வருத்தப்படு, எங்கும் நீ குறைகளை காண்பாய். ஆனால், நீ உலகுக்கு உதவி செய்ய விருப்பினால் உலகை தூற்றாதே, குறை சொல்லாதே. குறை சொல்லி உலகை இன்னும் பலவீனப்படுத்தாதே. உலகின் குறைகள், குற்றங்கள் எல்லாம் அதன் பலவீனத்தால் விளைபவை அல்லவா.?  (விவேகானந்தர்)
தவறு,பிழை,குறை மனித வாழ்வில் இல்லாமலில்லை என்றாலும் நாம் முடியுமான அளவு அவற்றை தவிர்த்துக் கொண்டால் நமக்குள் இருக்கும் சொற்ப பிரச்சினைகளை இலகுவாகவும்,விவேகமாகவும் தீர்த்துக் கொள்ள வாய்ப்புண்டு.

இங்கு ஒரு தத்துவக் கதை ஒன்றை சொன்னால் பொருத்தம் என்ற எண்னத்துடன் ‘’ சாக்ரடீஸிடம் ஒருவர் ஓடோடி வந்து சொன்னார். "சாக்ரடீஸ் இதைக் கேள்விப்பட்டீர்களா?" வந்தவர் மற்றவர்களைப் பற்றிய புரளிகளிலும், வதந்திகளிலும் மிகுந்த ஈடுபாடுடையவர். சாக்ரடீஸ் அவரை மேலே பேச விடாமல் நிறுத்தி கேட்டார்.

 "ஐயா நீங்கள் சொல்ல வரும் விஷயம் முற்றிலும் உண்மை என்று உங்களால் உறுதியாகச் சொல்ல முடியுமா?" அவர் பேச்சில் ஆரம்பித்தில் இருந்த வேகம் குறைந்தது. "இல்லை...." "நீங்கள் சொல்லப் போவது எனக்கோ சமூகத்திற்கோ மிகவும் உபயோகப்படக்கூடிய விஷயமா?" "அதில்லை..." "இதைத் தெரிந்து கொள்ளாவிட்டால் எனக்கோ சமூகத்திற்கோ ஏதேனும் நஷ்டம் உண்டா?" "இல்லை" "இதைச் சொல்வதில் உங்களுக்காவது நற்பயன் ஏற்படுமா?" "அப்படிச் சொல்ல முடியாது....." அவர் குரல் ஈனசுரத்தில் வந்தது. 


"
ஐயா, எதை உண்மையென்று உறுதியாகக் கூற முடியாதோ, எதனால் நமக்கோ, சமூகத்திற்கோ பயனுமில்லையோ, எதை அறிந்து கொள்ளாததால் நமக்கு நஷ்டமுமில்லையோ அதைத் தெரிந்துகொள்ள நான் விரும்பவில்லை. குறுகிய வாழ்க்கையில் தெரிந்து கொள்ளவும் பேசவும் எத்தனையோ நல்ல விஷயங்கள் இருக்கின்றன. அதில் நம் கவனம் செலுத்தலாமே" என்று சாக்ரடீஸ் சொல்ல, வந்தவர் அசடு வழிய அங்கிருந்து நகர்ந்தார்’’. 

மற்றவர்களைப் பற்றிய விஷயங்கள் நம்மிடம் சொல்லப்படும் போது நம்மில் எத்தனை பேர் சாக்ரடீசின் மனோபாவத்தில் இருக்கிறோம்? கேட்கும் விஷயங்கள் உண்மையா என்பதை அறிய நாம் உண்மையில் முயல்கிறோமா? நமக்கோ மற்றவர்களுக்கோ பயன்படும் விஷயங்களாக அவை இருக்கின்றனவா என்று சல்லடையிட்டு தேர்ந்தெடுக்கிறோமா..?

சமகால அரசியல்,கொள்கை,கோட்பாடு,பிளவு போன்ற இன்னோரன்ன வேண்டாத வியாதிகளை பாம்பு சட்டை மாற்றிக் கொள்வது போல் மாற்றிக் கொள்ள வேண்டிய ஒரு காலத்தில் இருக்கின்றோம்..! 

ஆக,ஒரு சமூகம் விடியலையும்,வினோதத்தையும் நோக்கிச் செல்ல வேண்டுமானால் ஒவ்வொரு தனி மனிதனும் தனியாக சிந்திக்க வேண்டும் அப்போதுதான் நமக்கான தனித்துவத்தை வென்றடுக்கலாம்  ''உன் உள்ளம் திருந்தாத வரை சமூகம் திருந்தாது'' என்ற பொன் மொழி உறுதிப் படுத்தும்.. ’  ‘

உன்னை திருத்து உலகம் தானாக திருந்தும் ஆதலால் நிறை கூறி குறைகளை வீசி விடுவோம் நம் சமூக ஒற்றுமைக்காகவேனும்..!



Thanking you,


Zuhair Ali (Ghafoori-UoC)