Friday 26 August 2011

தீய சக்தியின் நோக்கம் என்ன

இணையம்,ஊடகத்தின் கருத்தின் படி எல்லா
சம்பவத்திற்குப் பின்னால் எதோ ஒரு தீய சக்தி இருப்பதாகவும்,குழப்பம்,இனவாதம்,அரசியல்
போன்ற தேவையற்ற பிளவுகளை உண்டாக்குவதற்கு முற்படுகின்றார்கள் எனவும் தெரிய வருகின்றது

யதார்த்தத்தில் கிண்ணியாவில் நடந்தது எதிர் பார்க்கப்படாத தீய சக்திகளால் திட்டமிடப்பட்டு
நடத்திய சம்பவம் என்பது தெளிவு எனினும் ஊடகம்,இணையம் சில தேவையற்ற கருத்துக்களை
வெளியிடுகின்றன.உதாரணமாக: முஸ்லிம்கள் தீவரவாதிகள்,அவர்களுக்கும் கல்முனை ,காத்தான்குடி
இனருக்கும் தொடர்பு இருப்பதாகவும் வெறுமனே வதந்தியை கிளப்புகின்றனர் ஆக,நமது ஊடக
தரப்பினருக்கே இவை அனைத்தும் செல்லும் .மொத்தத்தில் இந்த கிளர்ச்சியலர்களின் நோக்கம் என்ன ?

*நாட்டில் மீண்டும் இனப்பிரச்சினை,பிளவை உண்டக்குதலா...
*நாட்டில் எல்லா பகுதிகளிலும் படையினரை செயலில் அமர்த்துவதா...
*அரசியலின் விளையாட்டில் இது ஒரு தந்திரமா ....
*அல்லது ஊர்/உலகுக்கு காட்டவேண்டும் என்ற நோக்கமா.....
*அமைதியாக இருக்கின்ற முஸ்லிம் ஊர்களை தூங்க விடாதிருப்பதா...
*அல்லது புனித இஸ்லாமிய ரமலான் மாதத்தை இழிவுபடுத்துவதா...?

விடை கிடைக்க விடிய விடிய காத்திருந்தாலும் யதார்த்தம்,உண்மை வெளிப்படதோ...! இனவாதம்,பிரச்சினை இல்லாமல் அமைதியாக சகல இன மக்களும் ஒற்றுமையாக வாழ
வேண்டும் என்று பிரார்த்திப்போம் ..