“யூதர்கள் உலகம் முழுவதும் பரந்து வாழ்கிறார்கள். ஆனால் யூதர்களுக்கு என்று ஒரு தாயகம் இல்லை.” இந்தக் கூற்று முதலில் சியோனிச தேசியவாதிகளின் சுலோகமாக இருந்தது. பின்னர் ஆங்கிலேய, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களால் உலகம் முழுவதும் பரப்பப்பட்டது.
பைபிளில் வரும் சரித்திர சம்பவங்கள் போன்று தோற்றமளிக்கும் கதைகள், புராண-இதிகாச தரவுகளை விட சற்று தான் வேறுபடுகின்றது. சரித்திரம் என்பது, ஒரு சம்பவம் நடந்தாக விஞ்ஞான பூர்வமாக நிரூபிக்கப் பட வேண்டிய தேவை உள்ள ஒன்று. இல்லாவிட்டால் அவை வெறும் புராண-இதிகாச கதைகள் என்ற வரையறைக்குள் தான் வரும்.
இஸ்ரேல் -அல்லாஹ் இவர்களுக்கென்றே ஒரு சூராவை அருளியும் அவர்களை பல இடங்களில் புகழ்ந்தும் பேசி இருக்கிறான்
இஸ்ராயீல் மக்களே! (முன்னர்) நான் உங்களுக்கு அளித்த என்னுடைய அருட் கொடையையும், உலகோர் யாவரையும் விட உங்களை மேன்மைப்படுத்தினேன் என்பதையும் நினைவு கூறுங்கள்.(02:47)
நபி (ஸல்) அவர்களும் ஸஹாபிகளும் குறுகிய எல்லைக்குள் அடக்கு முறைக்கு உட்பட்டு தப்பிச்செல்ல இன்னோர் இடம் தேடும் நிலையில் அல்லாஹ் ‘இஸ்ரா’ என்ற அற்புதப் பயணத்தின் மூலம் நபியவர்களை பலஸ்தீனுக்கு அழைத்துச் சென்று நபிமார்களுக்கெல்லாம் இமாமாக நின்று தொழுகை நடத்தும் அரிய சந்தர்ப்பத்தை வழங்கிய நிகழ்வில் நாம் பெறும் படிப்பினைகள் ஏராளம்.
பனூ இஸ்ரேலர்கள் -யாக்கோபின் வம்சா வழியினர் இஸ்ரவேலர் என்று அழைக்கப்பட்டனர். இதில் யாக்கோபின் 12 மகன்களில் ஒருவராகிய யூதாவின் வம்சா வழியினர் யூதர்கள்என்றழைக்கப்படுகின்றனர். கானான் தேசத்தில் ஏற்பட்ட பஞ்சத்தை அடுத்து இஸ்ரவேலர் கி.மு.1871ம் ஆண்டில் எகிப்துக்குச் சென்றனர்.
1946 வரை முழுமையாக பாலஸ்தீனம் என்று உலக வரைபடங்களில் குறிக்கப்பட்ட தேசம்.1947 ஆம் ஆண்டு ஐநா சபை மாற்றும் இங்கிலாந்து அமெரிக்கா போன்ற நாடுகளின் திட்டமிட்டசதியின் மூலம் பாலஸ்தீனம் துண்டாடப்பட்டு அதன் ஒரு பகுதி வந்தேறிகளான யூதர்களிடம் கொடுக்கப்பட்டது.1967 ஆம் ஆண்டு திட்டமிட்ட தாக்குதல் மூலம் பாலஸ்தீனின் பெரும்பான்மைஇடங்களை யூதர்கள் ஆக்கிரமித்தனர்.2000 ஆம் ஆண்டிற்கு இடைப்பட்ட கால கட்டத்தில் கிட்டத்தட்ட பெரும்பான்மையான (காசா மேற்குக்கரை ) உள்ளிட்ட சில பகுதிகளை தவிர 90%அதிகமான பகுதிகளை யூதர்கள் ஆக்கிரமித்துள்ளனர்.இன்று மேற்குக்கரையை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பத்தாஹ் கட்சியின் அதிபர் மெஹ்மூத் அப்பாஸ் எந்த ஐநா சபைபாலஸ்தீனத்தை திருடி இஸ்ரேல என்ற ஆக்கிரமிப்பு தேசத்தை உருவாக்கியது
மேலும் இஸ்ரேல ஆக்கிரமிப்பை செய்யும் போதெலாம் கண்டு கொள்ளாமல் இஸ்ரேலை பாதுகாத்ததோ அந்த அமைப்பில் சுதந்திர பாலஸ்தீனம் என்ற ஒரு கோரிக்கையை விடுத்துள்ளார்வழக்கம் போல அமெரிக்கா இஸ்ரேலுக்கு ஆதரவாக தனது எதிர்ப்பை காட்டிவருகிறது.இதில் அபாஸ் கோருவது ஒன்றும் முழுமையான பாலஸ்தீனத்தை அல்ல .மாறாக 1967 ஆம் ஆண்டிற்குபிறகு அதாவது 1967 ஆண்டிற்கு முன் இஸ்ரேல் ஆக்கிரமிட்ட பகுதிகள் அனைத்தும் இஸ்ரேலுக்கு சொந்தம்.1967 ஆம் ஆண்டிற்கு பின் மீதம் இருக்கும் பகுதிகள் பகுதிகள் பாலச்டீநியர்களுக்குசொந்தம்.மீதமுள்ள பகுதி என்பது வெறும் 20% இடங்கள் மட்டுமே பாலஸ்தீனத்திற்கு சொந்தம் என்ற கோரிக்கையை அப்பாஸ் ஐநா(நைனா)சபையில் விடுத்துள்ளார்.இது எந்த வகையிலும்பலஸ்தீனத்திற்கு பலனை தரப்போவதில்லை மாறாக இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை நியாயப்படுத்துவதாகவே உள்ளது.அப்பாஸின் இக்கோரிக்கையை ஹமாஸ் உள்ளிட்ட பலஸ்தீன சுதந்திரபோராட்ட குழுக்கள் நிராகரித்து விட்டனர்.பாலஸ்தீனியர்கள் மட்டுமில்லை சுதந்திரத்தை விரும்பும் எவருமே இதைப் போன்ற அடிமைத்தனத்தை விரும்பவே மாட்டன்.
வரலாறு தெரிந்த எவரும் இஸ்ரேலை ஆதரிக்கவே மாட்டன்.ஏனெறால் பாலஸ்தீனம் என்ற ஒரு நாட்டை ஆக்கிரமிப்பு செய்து பலஸ்தீனில் உள்ள பூர்விக குடிமக்களை நாட்டை விட்டுவெளியேற்றி அல்லது அவர்கள் கொன்று குவித்து அந்த நாட்டில் ஐரோப்பாவிலிருந்து வந்திறங்கிய வந்தேறிகளான யூதர்கள் இஸ்ரேல என்ற நாட்டை உருவாக்கினர் இன்றுவரைபாலஸ்தீனர்களை தினம் தினம் கொன்று குவிக்கும் இஸ்ரேலை அமெரிக்கா தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் காப்பாற்றி வருகிறது.தனது சொந்த நாட்டிற்காக போராடுபவர்களைதீவிரவாதிகள் என்று அமெரிக்காவும் இஸ்ரேலும் கூறினால் அதை எப்படி ஏற்க்கமுடியும் அப்படி ஏற்றுக்கொண்டால் வெள்ளையர்களை நாட்டை விட்டு வெளியேற போராடிய போராளிகளானதிப்பு சுல்தான் சுபாஸ் சந்திர போஸ்,பகத் சிங் மற்றும் சுதந்திர போராட்ட வீரர்கள் அனைவரையும் நாம் தீவிரவாதிகள் என்று தான் அழைக்க வேண்டும்.எனேற்றால் இவர்களை அப்போதையவெள்ளை அரசு தீவிரவாதிகள் என்றுதான் அழைத்தது.பயங்கர வாதமும் ஏகடியபத்தியமும் என்றும் நிலைத்ததாக வரலாறே கிடையாது.இதை இஸ்ரேலிற்கு காலம் உணர்த்தும்.
இஸ்ரேல் என்ற தேசம் உருவான போது, அங்கே யூதர்களின் புராதன மொழியான ஹீபுரூ பேசுவோர் யாரும் இருக்கவில்லை. எல்லோரும் அதற்கு முன்னர் வாழ்ந்த நாட்டு மொழிகளையே பேசினர், இன்றும் கூட வயோதிபர்கள் ஜெர்மன், பிரெஞ்சு, ஆங்கிலம், அரபு என்று பல்வேறு மொழிகளை வீடுகளில் பேசி வருகின்றனர். இளம் சந்ததி மட்டுமே ஹீப்ரூ மொழியை தமது தாய் மொழியாக்கியது.
1933 வாக்கில் எழத்தொடங்கிய நாசிசத்தால் ஐந்தா வது அலையாக யூதர்கள் குடியேறினர். இந்த அலியா-5 க்குப் பிறகு, 1922ல் அப்பகுதியில் இருந்த மக்கள் தொகையில் 11% யூதர்களாகஇருந்தநிலை மாறி, 1940ல் யூதர்கள் மக்கள் தொகையில் 30% ஆக உயர்ந்தார்கள். நிலப்பகுதியில், 28% சியோனிச நிறுவனங்கள் வாங்கியிருந்தன. இது தவிர யூதர்கள் தனிப்பட்ட முறையிலும்நிலங்களை வாங்கியிருந்தனர். இசுரேலின் தென் பாதி வறண்ட பாலை நிலமாகவும், மக்கட்தொகை நெருக்கமற்றதாகவும் இருந்தது. இரண்டாம் உலகப்போருக்கு முன்னர் ஐரோப்பாவில்மிகப்பெரிய அளவில் நிகழ்ந்த இனப்படுகொலையில் ஏராளமான யூதர்கள் கொல்லப்பட்ட பின்னர், ஒப்புதலின்றி (சட்டமுரணாக) ஏராளமான வெளி நாட்டு யூதர்கள் வந்து இறங்கினர்.இரண்டாம் உலகப் போரின் இறுதியில் பாலசுத்தீனத்தில் சுமார் 600,000 யூதர்கள் இருந்தனர்.
1936 முதல் 1939 வரை அரபியர் யூதர்களுக்கு எதிராக கிளர்ச்சி செய்தனர். அரபியர்கள் கொடுத்த நெருக்கடியை அடுத்து பிரிட்டன் பாலஸ்தீனத்திற்கு குடியேறிக் கொண்டிருந்த யூதர்களின்எண்ணிக்கையைக் குறைக்க ஆரம்பித்தது. இதையடுத்து பெரும்பாலான யூதர்களை சட்டத்திற்கு விரோதமாகக் குடியேறியவர்கள் என்று கருதப்பட வேண்டியதாயிற்று. இதனால் மேலும்பதட்டம் அதிகரித்தது. 1933 முதல் 1939 வரை ஐந்தாவது அலியா கால கட்டத்தில் யூதர்கள் நாஜிக் கட்சியினரின் அட்டகாசத்தால் ஜெர்மனியிலிருந்து குடியேறினர். 1941ல் லேஹி என்ற ரகசியஅமைப்பு அமைக்கப்பட்டது; பல்மாக் எனப்படும் அதிரடிப்படையும் அமைக்கப்பட்டது. 1944ல் பிரிட்டிஷ் ராணுவத்தின் ஒரு பகுதியாக யூத படைப் பிரிவு அமைக்கப்பட்டது.
1948 ஆம் ஆண்டு அன்றைய உலக வல்லரசு என்று அழைத்துக் கொள்ளப்பட்ட நாடுகளால் ஐரோப்பாவில் இருந்து வந்தேறிகளாக வந்த யூதர்களுக்காக பலஸ்தீன மண்ணின் பூர்விககுடிமக்களை அவர்களின் சொந்த இடங்களில் இருந்து விரட்டி விட்டு அவர்களின் இடம் வந்தேறிகளான யூதர்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்டது.இது தான் அன்றைய உலக வல்லரசுகளபலஸ்தீன மக்களுக்கு செய்த முதல் துரோகம்.அந்த துரோகத்தில் பலஸ்தீன மக்களின் இரத்தத்தில் பிறந்த நாடுதான் இன்று அழைக்கப்படும் இஸ்ரேல.அன்று இஸ்ரேல் என்ற நாட்டிற்கு ஐநாமூலம் பாலஸ்தீனர்களிடம் இருந்து பிடுங்கி கொடுக்கப் பட்ட இடம் மிகவும் குறைவு அதுவும் அவர்களின் மக்கள் தொகையை கணக்கிடும் போது மிகவும் அதிகம்.ஆனால் இன்று வந்தேறியூதர்கள் பாலஸ்தீனர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 80% நிலங்களை அபகரித்து உள்ளனர்.
இதைப் பற்றி எல்லாம் உலக நாடுகளோ அல்லது மீடியாக்களோ ஒரு செய்தி கூட வெளியிடுவதில்லை.ஆனால் அதே நேரத்தில் இஸ்ரேலின் கொடூர தாக்குதலின் மூலம் தினம் தினம்கொல்லப்படும் பாலஸ்தீனர்களை பாதுகாக்கவும் தங்கள் நாட்டை இஸ்ரேல என்ற பயங்கரவாத நாட்டிடம் இருந்து பாதுகாக்கவும் போராடினால் அவர்களுக்கு பெயர் தீவிரவாதிகள்.இது தான்நீதியோ.இதை தீவிரவாதம் என்று கூறினால் வெள்ளையர்களின் ஆக்கிரமிப்பை எதிர்த்து போராடிய சுபாஸ் மற்றும் பகத் சிங்கை தீவிரவாதிகள் என்று தான் நாம் அழைக்க வேண்டும்எனெற்றால் அன்றைய வெள்ளை அரசு இவர்களை பயங்கர வாதிகள் என்று தான் அழைத்தது.நாம் அதை ஏற்கவில்லை.நம்முடைய்ய நாட்டிற்காக அன்று போராடிய நமது சுதந்திர போராட்டவீரர்கள் போலத்தான் பாலஸ்தீனர்களும்.சுதந்திரம் அனைவருக்கும் பொதுவானது.இடம் மொழி வேண்டுமானால் வேறுபடலாம் ஆனால் சுதந்திரத்தின் நோக்கமே அடிமைத்தனத்தைஎதிர்ப்பது தான்.
பாலஸ்தீன் பற்றிய நெல்சன் மண்டேலாவின் கருத்து :
பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, அவர்களின்துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது.இரண்டாம் உலகப்போருக்கு பின் இரண்டு சம்பவங்கள் உலகை உலுக்கிக்கொண்டிருந்தது.இதில் ஒன்றான தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்குவந்தது. ஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின்துயரம் இன்றளவும் தொடர்கிறது.பலஸ்தீன சுதந்திர போராட்டமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, அவர்களின்துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது.இரண்டாம் உலகப்போருக்கு பின் இரண்டு சம்பவங்கள் உலகை உலுக்கிக்கொண்டிருந்தது.இதில் ஒன்றான தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்குவந்தது. ஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின்துயரம் இன்றளவும் தொடர்கிறது.பலஸ்தீன சுதந்திர போராட்டமும் இன்றுவரை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
பாலஸ்தீன வரலாறு - இஸ்ரேல் பற்றிய காந்தியின் கருத்து இஸ்ரேல் அரசு உருவாக ஆதரவு திரட்டுவதில் ஈடுபட்டிருந்த ஜியோனிசத் தலைவர்கள் தங்களுக்குச் சாதகமான அறிக்கை ஒன்றை மகாத்மா காந்தியிட மிருந்து பெறப் பெரிதும் முயன்றனர்.அத்தகைய அறிக்கை தங்கள் நோக்கத்திற்கு மாபெரும் தார்மீக வலுச்சேர்க்கும் என்று அவர்கள் நம்பினர். ‘‘யூதர்கள் பாலான எனது பரிவு, நீதியைப் பார்ப்பதில் எனது கண்களைமறைத்துவிடவில்லை. தங்களுக்கென்று ஒரு தாய்நாடு வேண்டுமென்ற யூதர்களின் கோரிக்கையை என்னால் ஏற்க முடியவில்லை. மற்ற மக்களைப் போலவே அவர்களும் ஏன் தாங்கள்பிறந்து வளர்ந்த நாட்டையே சொந்த நாடாகக் கொள்ளக் கூடாது?’’ பாலஸ்தீனர்களது உரிமையைப் பற்றிப் பேசுகிறபோது, ‘‘ஆங்கிலேயர்களுக்கு எப்படி இங்கிலாந்து சொந்தமோபிரெஞ்சுக்காரர்களுக்கு எப்படி பிரான்ஸ் சொந்தமோ அதைப் போலவே பாலஸ்தீனம் அராபியர்களுக்குச் சொந்தமானது. அராபியர்கள்மீது யூதர்களைத் திணிப்பது தவறானதும்மனிதத்தன்மையற்றதும் ஆகும். மானமிகு அராபியர்களை ஒழித்துப் பாலஸ்தீனத்தின் ஒரு பகுதியையோ அல்லது முழுவதையுமோ யூதர்களின் தேசமாக்குவது என்பது மனித குலத்திற்கேஎதிரான குற்றம்’’ என்றார் காந்தி. நேர்மையும் நீதியுணர்வும் கொண்ட யாருமே இஸ்ரேல் அரசை ஒருபோதும் ஆதரித்ததில்லை
பல வருடங்களுக்கு முன்பு இறைவனின் திருச்சித்தப்படி தேராகின் மகனாகிய ஆபிரகாம் ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தை விட்டு தற்போது இஸ்ரேல் என்றழைக்கப்படுகிற கானான்தேசத்தை கி.மு.2161 ல் வந்தடைந்தார். ஆபிரகாமின் மகன் ஈசாக்கு. ஈசாக்குக்கு இரண்டு மகன்கள்: ஏசா மற்றும் யாக்கோபு. ஈசாக்கின் இளைய மகன் யாக்கோபின்மேல் கடவுள் பிரியமாகஇருந்தது மட்டுமன்றி அவனுக்கு இஸ்ரேல் என்றும் பேரிட்டார்.
"அப்போது அவர்: உன் பேர் இனி யாக்கோபு என்னப்படாமல் இஸ்ரவேல் என்னப்படும்; தேவனோடும் மனிதரோடும் போராடி மேற்கொண்டாயே என்றார்." - ஆதியாகமம் 32:28
இப்படியாகப் பல்வேறு காலக்கட்டங்களில் பல நாட்டு அரசர்களால் ஆளப்பட்ட இஸ்ரேலை சுதந்திர நாடாக்கி சிதறடிக்கப்பட்ட யூதர்கள் எல்லாம் அங்கு ஒன்றுகூடி வாழவேண்டும் என்றஎண்ணம் மட்டும் யூதர்கள் மத்தியில் இருந்து கொண்டே வந்தது. இந்த எண்ணம் சீயோனிசம் என்ற யூத தேசிய விடுதலை இயக்கத்தின்மூலம் உத்வேகம் பெற்றது. சீயோன் எனப்படுவதுஜெருசலேமில் உள்ள ஒரு மலை ஆகும். 1882 முதல் 1903 வரை ஏராளமான யூதர்கள் முக்கியமாக ரஷியாவிலிருந்து இஸ்ரேலுக்கு குடிபெயர்ந்தனர். இந்த சம்பவம் முதல் அலியாஎன்றழைக்கப்படுகிறது. 1897ல் யூத நாட்டின் ஆன்மீகத் தந்தை என்றழைக்கப்பட்ட தியோடர் ஹெர்சல் ஸ்விட்சர்லாந்தில் பேசல் என்ற இடத்தில் முதல் சீயோன் மாநாட்டைக் கூட்டி யூதமக்களுக்கான புதியதொரு நாட்டை அமைக்க யூதர்களுக்குள்ள உரிமையைப் பிரகடனம் செய்தார். 1904 முதல் 1914 வரை இரண்டாவது கட்டமாக யூதர்கள் ரஷியா மற்றும் போலந்திலிருந்துகுடிபெயர்ந்தனர். இது இரண்டாவது அலியா என்றழைக்கப்படுகிறது.
ஒட்டோமான் அரசின் இறுதிப்பகுதியில் துருக்கியர்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதால் அரபியரிடையே அதிருப்தி ஏற்பட்டது. ஓட்டோமான் அரசிடமிடமிருந்து சுதந்திரம் வாங்கிக்கொடுக்கப்படும் என்ற வாக்குறுதியை நம்பி யூதர்களும் அரபிகளும் முதல் உலகப்போரில் அமெரிக்கா, பிரிட்டன் உள்ளிட்ட நேச நாடுகளுக்கு ஆதரவளித்தனர். இதனால் அரபு தேசியம்அமைக்கப்படவேண்டும் என்ற எழுச்சி ஏற்பட்டது. பாலஸ்தீனத்திலுள்ள அரேபியர்களுக்கும் யூதர்களுக்கும் பகைமை வளர்ந்தது.
முதல் உலகப்போருக்குப் பிறகு பாலஸ்தீனத்திற்கு வந்து குடியேறிய யூதர்களின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பித்து. மேலும் மோசமடைந்து வந்த உலகளாவிய பொருளாதார சூழலாலும்வேறுபல காரணங்களாலும் அரபியர்களும் பெருமளவில் வர ஆரம்பித்தனர். பெருமளவில் அதிகரித்த யூதக் குடியிருப்புகளும் யூதர்களால் வாங்கப்பட்ட பண்ணை நிலங்களிலும்அவர்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளிலும் அரபியர்களை பணியமர்த்தாததும் அரபியர்களின் கோபத்தை அதிகரித்தன. இதையடுத்து அரபியர்கள் யூதர்களைத் தாக்கத் தொடங்கினர்.
ஐந்து வாரங்களுக்குப் பிறகு இந்தக் கமிட்டி தன் அறிக்கையை சமர்ப்பித்தது. இதன்படி பாலஸ்தீனம் இரு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒரு பகுதி யூதர்களுக்கும் இன்னொரு பகுதிஅரபியர்களுக்கும் கொடுக்கப்படவேண்டும். இந்த அறிக்கை ஐ. நா. சபையில் தீர்மானம் 181 வடிவத்தில் நவம்பர் 1947ல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இத்தீர்மானத்திற்கு 33 நாடுகள் ஆதரவாகவும்13 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன. 10 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்து கொள்ளவில்லை. அரபு லீக்கைச் சேர்ந்த அரபு நாடுகள் இந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்தன என்பதுகுறிப்பிடத்தக்கது. இந்தத் தீர்மானம் அறிவிக்கப்பட்டவுடன் பாலஸ்தீனியர்களுக்கும் யூதர்களுக்கும் பாலஸ்தீனப் பகுதிகளைப் பிடிப்பதில் கடும் மோதல் ஏற்பட்டது. 1948, மே 14 அன்றுஇஸ்ரேல் நாடு பிரகடனப்படுத்தப்பட்டது. மறுநாளே அரபு நாடுகள் இஸ்ரேல் மீது படையெடுத்தன.
அதே போன்று இவர்களுக்கு பல எச்சரிக்கைகள்,உதாரணங்கள் காட்டியும் அல்லாஹ்வுக்கோ,நபிமார்களுக்கோ (பல நபிமார்கள் இந்த சமூகத்திட்கே அனுப்பப்பட்டது)
நாம் இஸ்ராயீலின் சந்ததியினருக்கு (முன்னறிவிப்பாக தவ்ராத்) வேதத்தில்: “நிச்சயமாக நீங்கள் பூமியில் இருமுறை குழப்பம் உண்டாக்குவீர்கள்; (அல்லாஹ்வுக்கு வழிபடாது) ஆணவத்துடன், பெரும் அழிச்சாட்டியங்கள் செய்பவர்களாக நடந்து கொள்வீர்கள்” என்று அறிவித்தோம்.(17:04)
மன்னர் பைசல் அவர்கள் "இஸ்ரேலுக்கு" எதிரான ஒக்டோபர் யுத்தத்தின் போது மேற்கு நாடுகளுக்கு "பெட்ரோல்" விநியோகிப்பதை "நிறுத்திய" போது சொன்ன பிரபல்யமான கூற்றுதான் இது.
"நாமும் எமது மூதாதையர்களும் பேரித்தம் பழம் உண்டும்,பாலைக் குடித்தும வாழ்ந்தவர்கள் மேற்கு நாடுகள் எமக்கு பொருளாதாரத் தடை விதித்தால் நாம் மீண்டும் பேரித்தம் பலத்தோடும் பாலோடும் வாழ்ந்து கொள்வோம்"
கலீபா உமர் (ரழி), தளபதி அலிப் அர்ஸலான் (ரஹி), ஸுல்தான் நூருத்தீன் ஸின்கி (ரஹி), ஸுல்தான் ஸலாஹுத்தீன் அய்யூபி (ரஹி), ஸுல்தான் முலப்பர் கதஸ் (ரஹி)ஸுல்தான் முஹம்மத் அல்பாதிஹ் (ரஹி) போன்ற புகழ்பூத்த வீரத் தலைவர்களை முஸ்லிம் உம்மத் பலஸ்தீன மீட்புப் போராட்டத்தில் அவர்கள் ஈட்டிய வெற்றியின் மூலமே பெற்றுக் கொண்டது.
உமர் முஹ்தார் போன்ற பாலை வானச் சிங்கம் இன்னும் ஓர் முறை தோன்றாமல் போவதும் இல்லை புனித குதுசை மீட்டெடுக்க ஒரு மா வீரன் வராமல் இருக்கப் போவதும் இல்லை கிங் பைசல் போன்ற முதுகெலும்புள்ள அராபிய தலைமககள் எப்போது கண் திறக்குமோ...!
http://madawalanews.com/9679
http://4freeproxy.com/browse.php?u=81SQ7bg5SAvCG4Sf34eXa0sbAcV0%2BOwBzIvAiFLd%2BczuZByn7WJ5DTG%2FG8KoQnmhlA%3D%3D&b=29